கொங்கு மண்டலத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ஜோதிபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மீது செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் பணமோசடி புகாரளிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் சிலருடன் சேர்ந்து ஏழை தம்பதிகளிடம் குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாத தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்த கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றதையும் போலீசார் உறுதி செய்தனர்.
இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்த நிலையில், யாருக்கெல்லாம் அவர்கள் குழந்தைகளை விற்றனர் எனும் பட்டியலைத் தயார் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.