கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மூப்பகோயில் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஏகாரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அப்போது அவர் தண்ணீரின் வேகம் காரணமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ராஜேஷை தேடி வருகின்றனர்.