புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பூச்சிக்கடை அருகே புதுச்சேரியின் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.
தஞ்சை பேராவூரணியில் நடைபெறும் திருமண நிகழ்வில் பங்கேற்கப் புதுக்கோட்டை வழியாகச் சென்ற புதுச்சேரி வேளாண்மைத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் போது விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக அமைச்சர் ஜெயக்குமாருக்குக் காயம் ஏதும் இல்லாத நிலையில் காயமடைந்த அவரது தனி உதவியாளர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.