வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே தாய் மற்றும் மகளைக் கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அகரம்சேரி பகுதியைச் சேர்ந்த குமாரி என்பவர், தனது கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதால் தாய் பத்மாவுடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த பரிமளாவுக்கும் குமாரி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பரிமளா மற்றும் அவரது குடும்பத்தினர்,
குமாரி மற்றும் பத்மா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பலத்த காயமடைந்த பத்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.