பாணாவரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில், பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய பாலகிருஷ்ணனை, மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.