கோவை மாவட்டம், பச்சமலை எஸ்டேட்டில் சிறுமியைக் கொன்ற சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 20-ம் தேதி பச்சமலை எஸ்டேட்டில் வடமாநில சிறுமியான ரோஷினிகுமாரி என்பவரை சிறுத்தை தூக்கிச் சென்றது. பின்னர் 2 நாட்கள் கழித்து சிறுமியின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற வனத்துறையினர், கூண்டு மற்றும் படக்கருவிகளைப் பொருத்தி இரவு, பகலாகக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.