உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் சர்வதேச ஒலிம்பிக் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுவியதை நினைவுகூரும் விதமாகவும், உலகம் முழுவதும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ஒலிம்பிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவர்கள் ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தினர்.