தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு யாதவ சமூகத்தினர் செம்மறி ஆடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் தங்கள் சமூகத்தினருக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் செம்மறி ஆடுகளுக்குக் காப்பீடு மற்றும் சிகிச்சை வழங்காதது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.