ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இந்திய ராணுவம் நடத்திய மருத்துவ முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
இந்திய ராணுவம் மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் அவ்வப்போது மருத்துவ முகாம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் சில்லி காண்டோ பகுதியில் உள்ள மானு பஞ்சாயத்தில் இந்திய ராணுவத்தின் 26 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படை மருத்துவ முகாம் நடத்தியது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.