ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஜோலார்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடியது. சாலையில் கவிழ்ந்த நிலையில், நடந்து சென்றவர் மீதும், நிறுத்தி வைக்கப்பட்ட கார் மீதும் லாரி பயங்கரமாக மோதியது.
இதில், சாலையில் நடந்து சென்ற கிறிஸ்து தாஸ் என்பவரது கால் துண்டானது. இந்த விபத்தில் கார் கழிவுநீர் கால்வாயில் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.