திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்த பெண்ணின் தலையில் மின்விசிறி கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் அடுத்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷினி வயிற்றுவலி காரணமாகத் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய படுக்கை மேலிருந்த மின்விசிறி திடீரென கழன்று சுபாஷினி மீது விழுந்தது. இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளதென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.