கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வீரல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
வீரல்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 3 மாதங்களாக குடிநீர் மற்றும் பேருந்து வசதிகள் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வருவதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்களால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.