கடந்த 4 ஆண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 833 துவக்கப் பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள் உட்பட ஆயிரத்து 138 பள்ளிகள் செயல்படுகின்றன.
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
2021 – 2022ஆம் கல்வியாண்டில், 95 ஆயிரத்து 13 மாணவர்கள் படித்துவந்த நிலையில், தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 300-ஆகக் குறைந்துள்ளது.
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததும் மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.