கன்னியாகுமரியில் பேரூராட்சி சார்பில் இயக்கப்படும் குப்பை சேகரிப்பு வாகனம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதில் ஒரு வாகனத்தில் உடைந்து போன கதவை கயிறு மூலம் கட்டிவைத்து கொண்டும், ஒரு கையால் பிடித்தபடியும் ஆபத்தான முறையில் ஓட்டுநர் இயக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.