இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈரானின் அணு சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் போர் தளங்கள், குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஈரான் தனது தாக்குதலை நடத்தியது.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா ஈரான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஈரான் இன்று மீண்டும் இஸ்ரேல் மீது 10 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 22 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.