போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீ காந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்கு ஒன்றில் பிரசாத் என்பவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப் பொருளை விலைக்கு வாங்கி பயன்படுத்தியதாக பிரசாத் வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் ஸ்ரீகாந்த் போதைப்பொருளைப் பயன்படுத்தியதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் வேறு எந்தெந்த நடிகர்களுக்குத் தொடர்பு உள்ளது, போதைப்பொருள் வேறு எங்கெல்லாம் கைமாற்றப்பட்டது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஸ்ரீகாந்த்துடைய வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வரும் போலீசார் கொக்கைன் போதைப்பொருள் தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.