அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்த அமலை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதற்கு ஈரான் மவுனம் காத்துவருகிறது.
அணு சக்தி திட்டம் தொடர்பாக ஈரான் – இஸ்ரேல் இடையே கடுமையான போர் நீடித்து வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்ததாகவும், போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொள்ளாத அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என மீண்டும் அறிவித்தார்.
ஈரான் எந்த பதிலும் அளிக்காத நிலையில் போரை நிறுத்த ஒப்புக்கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.