பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் தண்ணீர் திறந்துவிடக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திறந்துவிடப்படும் தண்ணீரால் 48 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் தண்ணீரை திறந்து விட அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் தண்ணீர் வழியிலேயே திருடப்படுவதாகவும் இது தொடர்பாகப் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்த விவசாய சங்கத்தினர் ஓலப்பாளையம் பகுதியில் மாடு, குதிரைகளைக் கட்டிவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காங்கேயம் – கரூர் சாலையில் மறியல் போராட்டம் செய்ய முயன்ற விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய போலீசார், அங்கிருந்த தோட்டத்திற்குள் வைத்து வெளியேவர முடியாதபடி வேலி அமைத்தனர்.
இதனால் போலீசாருக்கும், விவசாய சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.