ஏர் இந்தியா விமானங்களில் தணிக்கை முடியும் வரை அதன் சேவையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஜய் பன்சால் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதை அடுத்துப் பாதுகாப்பு தணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.