புதுச்சேரியில் மீண்டும் பணியமர்த்தக்கோரி தலைமை பொறியாளர் அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் சுமார் 2 ஆயிரத்து 642 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் சட்டப்ரேவை தேர்தல் விதிமுறைகளைக் காரணம் காட்டி பணி நியமனத்தை அரசு ரத்து செய்ததது.
இந்நிலையில், மீண்டும் பணி வழங்கக்கோரி புதுச்சேரி தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகம் மீது தக்காளிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.