திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பெண்களை தாக்கிய தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற 5 மாதக் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் கொடூரமாக தாக்கியதாக செய்திகள் வெளியானது,
இதுகுறித்து வீடியோ வைரலான நிலையில், தலைமை காவலர் ராமனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.