முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் நிகழ்வு, நேரலையில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை கவர்ந்து சாதனை படைத்துள்ளது.
இந்து முன்னணி சார்பில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சம் முருக பக்தர்கள் பங்கேற்ற நிலையில், மாநாட்டின் இறுதியில் கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. இரவு 8 மணிக்கு தொடங்கி 8.20 வரை எல்இடி திரையில் கந்த சஷ்டி கவசம் பாடல் ஒலிக்க, அதனை மாநாட்டில் பங்கேற்றவர்கள் திரும்பப் பாடினர்.
மேடையில் அமர்ந்திருந்த ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோரும் பக்தி பரவசத்துடன் கந்த சஷ்டி கவசம் பாடினர்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் தமிழ் ஜனம் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் நிகழ்வை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு பக்தி பரவசமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.