மகாராஷ்டிராவில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நாசிக் நகர் முழுவதும் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கோதாவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் நாசிக் நகர் முழுவதும் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது. மேலும் திரும்பும் திசையெல்லாம் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.