முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர் திறப்பானது விநாடிக்கு ஆயிரத்து 867 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டம் குமுளி மலை அடிவார பகுதிகளான லோயர்கேம்ப் முதல் வைகை அணை வரையிலான முல்லைப்பெரியாற்றின் நீர் வழிப்பாதை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.