பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 94 லட்சத்து 872 ரூபாய் கிடைத்துள்ளது.
கோயில் உண்டியல் நிரம்பிய நிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக் கல்லூரி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 94 லட்சத்து 872 ரூபாயும், 907 கிராம் தங்கமும், 25 ஆயிரத்து 09 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.
மேலும், பல்வேறு நாடுகளின் 645 வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவையும் காணிக்கையாகக் கிடைத்ததாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.