கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் நுரை பொங்கிச் செல்வதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி அணைக்கு விநாடிக்கு 701 கன அடி வீதம் வரும் நீர், தென்பெண்ணை ஆற்றில் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதில் அதிகளவிலான ரசாயனங்கள் கலந்திருப்பதால் தென்பெண்ணை ஆற்றில் செல்லும் நீர் நுரை பொங்கிச் செல்கிறது. துர்நாற்றம் வீசும் நீரால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.