வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பொதுமக்களின் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி முகம் சுளிக்க வைத்தது.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ரயில் மூலம் சென்னையில் இருந்து காட்பாடி சென்ற முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்காகச் சாலையில் காத்திருந்த மக்கள் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக நடைபெற்ற நடன நிகழ்ச்சி பொதுமக்களின் மத்தியில் முகச் சுழிப்பை ஏற்படுத்தியது.