அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்குப் பனி லிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது.
ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேலும் யாத்ரீகர்ளுக்கு இலவச, சத்தான உணவை வழங்கத் தன்னார்வலர்கள் சமையலறைகளை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.