திருச்செந்தூர் கோயிலில் காலை 6:10 மணிக்கு மேல் 6:47 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவதே மக்களுக்கும் அரசுக்கும் சிறந்த பலனை தரும் என நெல்லையை சேர்ந்த பிரபல ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான நேரம் குறித்து நெல்லை மாவட்ட பட்டயம் மற்றும் பட்டதாரி ஜோதிடர் சங்க நிறுவனத் தலைவர் சங்கர சுப்பிரமணியன், துணைத் தலைவர் சந்தோஷ் சுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசியவர்கள், திருச்செந்தூர் கோயிலில் காலை 6:10 மணிக்கு மேல் 6:47 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவதே மக்களுக்கும் அரசுக்கும் சிறந்த பலனை தரும் என தெரிவித்தனர்.