பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் உறுதி!
Aug 18, 2025, 02:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் உறுதி!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது என்றும், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. குவிங்டாவ் நகரில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் வரவேற்றார்.

இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்பதை இந்தியா நம்புகிறது என கூறினார். அமைதி, பாதுகாப்பு போன்ற சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருவதாக கூறிய அவர், இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம் என தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும், இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ள நாடுகளை விமர்சிக்க தயங்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பிராந்திய மேம்பாட்டு கூட்டாளி என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: minister rajnath singhDefense Ministers' ConferenceShanghai Cooperation Organizationscohinese Defense Minister Admiral Dong
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

Next Post

தஞ்சாவூர் : சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies