பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் உறுதி!
Jun 26, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் உறுதி!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது என்றும், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. குவிங்டாவ் நகரில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் வரவேற்றார்.

இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்பதை இந்தியா நம்புகிறது என கூறினார். அமைதி, பாதுகாப்பு போன்ற சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருவதாக கூறிய அவர், இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம் என தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும், இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ள நாடுகளை விமர்சிக்க தயங்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பிராந்திய மேம்பாட்டு கூட்டாளி என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: scohinese Defense Minister Admiral Dongminister rajnath singhDefense Ministers' ConferenceShanghai Cooperation Organization
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

Next Post

தஞ்சாவூர் : சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு!

Related News

தெலங்கானா : மதுபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய பெண் கைது!

ஜம்மு – காஷ்மீர் : தத்ரூபமாக ஒத்திகையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள்!

31.24 TMC நீரை திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவு!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களில் 23 சதவீதம் பேர் ஒரு முறையாவது போதைப்பொருட்கள் பயன்படுத்தியுள்ளனர் : துணைநிலை ஆளுநர்

இந்தி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் : அமித்ஷா

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாண்ட் : ஆற்றில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி, 9 பேர் மாயம்!

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

தெலுங்கானா : திரையரங்கின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் ரசிகர்கள் காயம்!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

கொலம்பியா : பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி போராட்டம்!

POCO F-7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies