பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் உறுதி!
Oct 2, 2025, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் உறுதி!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது என்றும், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. குவிங்டாவ் நகரில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் வரவேற்றார்.

இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்பதை இந்தியா நம்புகிறது என கூறினார். அமைதி, பாதுகாப்பு போன்ற சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருவதாக கூறிய அவர், இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம் என தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும், இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ள நாடுகளை விமர்சிக்க தயங்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பிராந்திய மேம்பாட்டு கூட்டாளி என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: minister rajnath singhDefense Ministers' ConferenceShanghai Cooperation Organizationscohinese Defense Minister Admiral Dong
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

Next Post

தஞ்சாவூர் : சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies