தஞ்சாவூர் அருகே தெற்குபாளையப்பட்டியில் சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட மண் கலன்களே ஈமத்தாழிகள் எனப்படுகின்றன.
இங்குக் காணப்படும் சிறிய அளவிலான ஈமத்தாழிகள் சிலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மண் கலயங்கள் காணப் படுகின்றன. இவை போரில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை உடன் வைத்துப் புதைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.