ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டுப் பிரகடனத்தின் கூட்டறிக்கையில் பஹல்காம் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படாததால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துள்ளார்.
சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டுப் பிரகடனத்தின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பஹல்காம் தாக்குதலுக்கு எவ்வித கண்டனமும் தெரிவிக்கப்படாததால் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்தார்.