கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதாளச் சாக்கடை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததாலும், அதே இடத்தில் குடிநீர் இணைப்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்யாததும் மண்ணரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டானதாகக் கூறப்படுகிறது.
நல்வாய்ப்பாகப் பள்ளம் ஏற்பட்டபோது வாகனம் எதுவும் செல்லாததால் அசம்பாவிதங்கள் நிகழவில்லை. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடி குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.