தமிழகத்திற்கு ஜூலை மாதம் தர வேண்டிய 31.24 TMC நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117-வது கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 TMC நீரை திறந்து விட வேண்டும் எனக் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது.