அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு ஒத்திகையில் வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் யாத்திரிகர்களுக்குப் பயங்கரவாதிகளால் ஏற்படும் இடர்களை தடுக்கும் விதமாகப் பாதுகாப்பு வழங்குவது குறித்துப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையை வீரர்கள் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டினர்.