ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே வீட்டிற்குள் நுழைந்த புலியை வனத்துறையினர் பிடித்தனர்.
பலமாவ் வனச் சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் உணவு தேடி வந்த புலி, சில்லி பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், புலியைப் பிடித்து வனப் பகுதிக்குள் விடுவித்தனர்.