ராமநாதபுரத்தில் அரசு பேருந்தை அரை மணி நேரத்திற்கும் மேலாக வழிமறித்து நின்ற தனியார் பேருந்தால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி நோக்கிச் செல்லும் அரசு பேருந்து, ராமநாதபுரம் பேருந்து நிலையம் வந்தடைந்த நிலையில், அங்கிருந்த தனியார் பேருந்து ஓட்டுநருக்கும், அரசு பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஒரே வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர், அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநரையும், தட்டிக் கேட்ட பயணிகளையும் தனியார் பேருந்து ஓட்டுநர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால் அங்குச் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.