சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை சுபன்ஷு சுக்லா படைத்துள்ளார்.
ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் இந்தியாவின் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர்கள் சென்ற டிராகன் விண்கலம் வெற்றிகரமாகச் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்தது. தொடர்ந்து விண்வெளி மையத்திற்குள் சுபன்ஷு சுக்லா வெற்றிகரமாகச் சென்றடைந்தார்.
இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை சுபன்ஷு சுக்லா படைத்துள்ளார்.