திருப்பாச்சூரில் ரவுடி தப்பிச் செல்ல முயன்ற கார் மீது தொங்கியபடி காவலர் பயணித்த சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் பதுங்கி இருந்த ரவுடி தோட்டம் சேகரின் மகன் அழகு ராஜாவை தனிப்படை காவலர் ஆனந்தகுமார் என்பவர் பிடிக்க முயன்றபோது, அவர் காரில் ஏறி தப்பி செல்ல முயன்றார்.
இதனையடுத்து ரவுடியை பிடிக்க சினிமா பாணியில் கார் மீது தாவிய காவலர் ஆனந்தகுமார் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தொங்கிய படி பயணித்துள்ளார். இருப்பினும், காரை நிறுத்தாத ரவுடி அழகு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் காவலரை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.
இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியான நிலையில், ரவுடி அழகு ராஜா மற்றும் அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.