சிவகங்கை அருகே குவாரியில் பாறை சரிந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் மீண்டும் பணியமர்த்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், கல்குவாரியை முறையாக ஆய்வு செய்யாத மல்லாக்கோட்டை விஏஓ பாலமுருகன் மற்றும் துணை வட்டாட்சியர் வினோத் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ‘
இவர்களை முறையாக கண்காணிக்க தவறிய வட்டாட்சியர் பரிமளாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விரைவில் பணி மாறுதலுக்கு உள்ளாகவுள்ள மாவட்ட ஆட்சியரான ஆஷா அஜித், துணை வட்டாட்சியர் வினோத் குமாரை மீண்டும் பணியமர்த்தி, காளையார்கோவில் துணை வட்டாட்சியராக நியமித்துள்ளார்.
மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஏஓ பாலமுருகனையும் பணியில் சேர்க்க கோரி தேவக்கோட்டை துணை ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.