வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார். இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது.
பிடிப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் டாப்ஸ்லிப் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை விடப்பட்டது. இதனால், வால்பாறை பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.