கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 70 சதவீததிற்கு மேல் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதிகள் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்ட நிலையில், சோலை குருவி என்ற தனியார் அமைப்பு வனத்துறையுடன் இணைந்து கடந்த 2019-ம் தேதி முதல் மாதமொரு முறை வனப்பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற தூய்மை பணிகளில் தனியார் அமைப்பின் உறுப்பினர்கள், வனத்துறை ஊழியர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் ஒரே நாளில் ஒரு டன் குப்பைகள் வனப்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், சேகரிக்கப்பட்ட குப்பைகளை யானை வடிவில் வைத்து குப்பைகளை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.