ஆண்டிபட்டி அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் அங்கு நடைபெறும் தினசரி அலுவல் குறித்து கேட்டறிந்தனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு தின ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், மாணவர்களை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், துப்பாக்கிகளின் வகைகள், முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன என்பது குறித்து விளக்கினர்.