அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எஞ்சினில் தீ வெளியேறியதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
லாஸ்வேகாஸில் இருந்து வடக்கு கரோலினா நோக்கி புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ரக விமானத்தில் 150க்கும் மேற்பட்டோர்ப் பயணித்தனர்.
புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகத் தீ வெளியேறியது.
இதையடுத்து விமானம் மீண்டும் லாஸ் வேகாஸில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. நல்வாய்ப்பாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.