தென்காசி மாவட்டத்தில் 72 வயது முதியவர் ஒருவர் புல்லட் பைக்கை பேட்டரி பைக்காக மாற்றி அசத்தியுள்ளார்.
பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம் என்பவர் புல்லட் பைக்கை மின்சார பைக்காக மாற்றும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார்.
தற்போது தனது முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ள அவர், இருசக்கர வாகனத்தில் ரிவல்ஸ் கியரையும் பொருத்தியுள்ளார்.
பைக்கை ஓட்டிக்கொண்டிருக்கும்போதே பேட்டரியை சார்ஜ் செய்வது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.