ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில், திமுக நகர்மன்ற தலைவர், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகச் சுயேட்சை உறுப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கீழக்கரை நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பேசிய சுயேட்சை உறுப்பினர் ஷேக் உசைன் என்பவர், தனது தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதற்குத் திமுக நகர்மன்ற தலைவர் எந்தப் பதிலும் அளிக்காததால் ஆத்திரமடைந்த ஷேக் உசைன், அதிமுக மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் கோரிக்கைகளைத் திமுக நகர்மன்ற தலைவர் புறக்கணிப்பதாகக் குற்றஞ்சாட்டி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.