ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? - சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் - சிறப்பு கட்டுரை!
Sep 17, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டுக்கு முழுமையான ஆதரவையும் ராணுவ ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், சவூதிக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் பாகிஸ்தானை ஈரான் போரில், சவூதி அரேபியாவுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பரில் தான் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்,இவ்வளவு சீக்கிரம் தனக்கு தர்ம சங்கடத்தைத் தரும் என்று பாகிஸ்தான் நினைத்துக் கூட பார்த்திருக்காது.

சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அணுசக்தி நாட்டின் இராணுவ வலிமைக்கான அங்கீகாரமாகவும் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாகவும்,அதிகமான நிதி உதவியாகவும் மாறும் என்றுதான் பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

மூன்றாம் நாடு ஒன்று தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ஒருவருக்கொருவர் பாதுகாப்புக்குத் துணை நிற்போம் என்ற உறுதிமொழியுடன், இரு நாடுகளும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கத்தாரில் இருந்த ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தாக்கி அழித்த நேரத்தில் சவூதியும், பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தின

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேலை மட்டுமின்றி,வளைகுடா நாடுகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது.

சவூதி அரேபியா மீது ஈரான் தாக்குதல்களைத் தொடங்கிய உடனேயே அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பாகிஸ்தான் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில்,சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் சவூதிக்கு விரைந்து சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் எப்போதும் சவூதி அரேபியாவுடன் உறுதியாக நிற்கும் என்றும், அமைதிக்கான இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்துக்காக பாடுபடும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்தச் சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளையும், மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி இளவரசருடனான சந்திப்பின் போது பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டார் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியுமான ஃபீல்ட் மார்ஷல்அசிம் முனீர் ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றொரு நாட்டுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்காக அல்ல என்றும், குறிப்பாக சவூதி அரேபியாவைப் பாதுகாப்பதற்காகவே என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் பேசியுள்ளார்.சவூதிக்கு இராணுவ உதவியை செய்தால் அது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவையும் மேலும் சிக்கல்களையும் கொண்டுவரும் என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு புறம் ஈரானுடன் மோதலை கடைப்பிடிக்க விரும்பாத சவூதி அரேபியா, நேரடியாக, ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

Tags: iran attackPakistani Prime Minister Shehbaz Sharifiran attacksiran attack uaeiran attackediran attack dubaiiran uae attacksaudi arabiairan attack on dubaiIranus attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackpakistan attack iran
Share
Tweet
SendShare
Previous Post

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

Next Post

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies