ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? - சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் - சிறப்பு கட்டுரை!
Aug 3, 2026, 04:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டுக்கு முழுமையான ஆதரவையும் ராணுவ ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், சவூதிக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் பாகிஸ்தானை ஈரான் போரில், சவூதி அரேபியாவுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பரில் தான் கையெழுத்திட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்,இவ்வளவு சீக்கிரம் தனக்கு தர்ம சங்கடத்தைத் தரும் என்று பாகிஸ்தான் நினைத்துக் கூட பார்த்திருக்காது.

சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அணுசக்தி நாட்டின் இராணுவ வலிமைக்கான அங்கீகாரமாகவும் நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாகவும்,அதிகமான நிதி உதவியாகவும் மாறும் என்றுதான் பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

மூன்றாம் நாடு ஒன்று தாக்குதல் நடத்தும் பட்சத்தில், ஒருவருக்கொருவர் பாதுகாப்புக்குத் துணை நிற்போம் என்ற உறுதிமொழியுடன், இரு நாடுகளும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கத்தாரில் இருந்த ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தாக்கி அழித்த நேரத்தில் சவூதியும், பாகிஸ்தானும் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தின

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேலை மட்டுமின்றி,வளைகுடா நாடுகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது.

சவூதி அரேபியா மீது ஈரான் தாக்குதல்களைத் தொடங்கிய உடனேயே அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பாகிஸ்தான் இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில்,சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் சவூதிக்கு விரைந்து சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் எப்போதும் சவூதி அரேபியாவுடன் உறுதியாக நிற்கும் என்றும், அமைதிக்கான இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்துக்காக பாடுபடும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்தச் சந்திப்பின் போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளையும், மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி இளவரசருடனான சந்திப்பின் போது பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டார் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியுமான ஃபீல்ட் மார்ஷல்அசிம் முனீர் ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றொரு நாட்டுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்காக அல்ல என்றும், குறிப்பாக சவூதி அரேபியாவைப் பாதுகாப்பதற்காகவே என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் பேசியுள்ளார்.சவூதிக்கு இராணுவ உதவியை செய்தால் அது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவையும் மேலும் சிக்கல்களையும் கொண்டுவரும் என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு புறம் ஈரானுடன் மோதலை கடைப்பிடிக்க விரும்பாத சவூதி அரேபியா, நேரடியாக, ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

Tags: iran attackPakistani Prime Minister Shehbaz Sharifiran attacksiran attack uaeiran attackediran attack dubaiiran uae attacksaudi arabiairan attack on dubaiIranus attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackpakistan attack iran
ShareTweetSendShare
Previous Post

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

Next Post

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies