டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு தொழிலதிபர் ஒருவர் 23 ஊழியர்களை துபாயிலிருந்து அனுப்பி வைத்தது அம்பலமாகி உள்ளது
நீட் விவகாரத்தில் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் தொடர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, போராட்டத்தில் பங்கேற்றவர்களில், 2,500க்கும் மேற்பட்டோர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பதும்,
வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், கேரள தொழிலதிபர் ஒருவர் துபாயில் இருந்து தம்முடைய நிறுவனத்தின் 23 ஊழியர்களை டெல்லி போராட்டத்திற்கு அனுப்பி வைத்ததும்,
அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டதும் அம்பலமாகியுள்ளது.
துபாய் நிறுவன ஊழியர்கள் செல்பி எடுத்து கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்வு, கரப்பான் பூச்சி ஜனதாவின் போராட்டத்திற்கு துபாய் நிறுவனம் ஏன் தமது ஊழியர்களை அனுப்பி வைத்தது,
அந்த நிறுவனம் டெல்லி போராட்டத்திற்கு நிதியுதவி அளித்ததா,
மருத்துவம் படிக்காத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், நீட் குறித்த போராட்டத்துக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
















