தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது என வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில் காங்கேயம் இன காளைகளுக்கான அழகுப்போட்டி நடைபெற்றது. இதில் அரசு கால்நடை மருத்துவர் சத்தியமூர்த்தி நடுவராக செயல்பட்டு, சிறந்த காளைகளை தேர்வு செய்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் எனவும் டெல்டா மாவட்டங்களை வாழ வைப்பதே தங்களது எண்ணம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருவதாகவும், அதனால்தான் அவர் வாய் திறப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
















