தொகுதி மறுவரையறை குறித்து தவறாகப் பேசும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பது குறித்து ஏன் பேசவில்லை? என, தமிழக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நல்லோர் சங்கமம் சார்பில் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் பால கௌதமன், பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஶ்ரீதர், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் பி செல்வம், தொகுதி மறுவரையறை குறித்து தவறாக பேசும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பது குறித்து ஏன் பேசவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
கில்லி திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம்போன்று முதல்வர் ஜோசப் விஜய், காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் வினோஜ் பி செல்வம் தெரிவித்தார்.
















